வாட்டும் வறுமை...தாயகம் திரும்பத் துடிக்கும் இலங்கை அகதிகள்!
திருநெல்வேலி:
-இசக்கிராஜன்
தஞ்சம் தேடி வந்த தமிழகத்தில் வறுமையும், நிம்மதியின்மையுமே கிடைத்ததால் மீண்டும் தாயகம் திரும்பும் மன நிலைக்கு இலங்கை அகதிகள் வந்துள்ளனர்.
இலங்கையில் கடும் போர் மூண்டதையடுத்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர்.
தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் 117 அகதிகள் முகாம்களில் அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.
இம் முகாம்களில் மட்டும் 19,478 குடும்பங்களைச் சேர்ந்த 74,072 பேர் வசிக்கின்றனர்.
இவர்கல் தவிர தனியாகவும் 7,785 குடும்பங்களை சேர்ந்த 22,089 பேர் இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர்.
மொத்தம் 96,162 அகதிகள் தமிழகத்தில் தங்கியுள்ளனர். இதில் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள போகநல்லூரில் உள்ள அகதிகள் முகாமில் 157 குடும்பங்களை சேர்ந்த 593 பேர் வசிக்கின்றனர்.
இங்கு போதிய அடிப்படை வசதி, வேலைவாய்ப்பு இல்லாததால் வறுமையோடு இவர்கள் போராடி வருகின்றனர். இதில் 7 குடும்பங்களை சேர்ந்த 28 பேர் தமிழக அரசிடம் சொந்த நாட்டிற்கு செல்ல அனுமதி கோரி விண்ணபித்தனர்.
தற்போது இலங்கையில் விடுதலை புலிகளுக்கும்-இலங்கை ராணுவத்திற்கும் மோதல் முற்றி பெரும் உயிரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், சொந்த நாட்டிற்கு திரும்ப விரும்பி அனுமதி கோரி அகதிகள் கோரியிருப்பது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் 28 அகதிகளும் சொந்த நாட்டிற்கு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இவர்கள் சங்கர் என்பவர் தலைமையில் வரும் 30-ந் தேதி இலங்கைக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இது போன்று இன்னும் ஏராளமான அகதிகளும் சொந்த நாட்டிற்கு செல்ல இம்முகாமில் இருந்து மனுச் செய்துள்ளனர். இது குறித்து அகதிகள் தரப்பில் சங்கர் என்பவர் கூறியதாவது,
எங்களுக்கு இலங்கையில் நிலம், வீடு அனைத்தும் உள்ளது. மேலும் வேலை வாய்ப்பும் உள்ளது. இங்கு வறுமையோடு பேராாட முடியவில்லை. இதனால் தான் உயிரைப் பணயம் வைத்தாலும் பரவாயில்லை, இலங்கைக்குச் சென்றுவிடுவது என்று தீர்மானித்து விட்டோம் என்றார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications