குற்றால நாளை சாரல் விழா தொடக்கம்
குற்றாலம்: குற்றாலத்தில் நாளை (28-ந் தேதி) முதல் சாரல் விழா தொடங்கிறது.
குற்றாலத்தில் சீசன் களைகட்டும்போது இந்த விழா நடக்கும். வருடம் தோறும் சுற்றுலாத்துறை இந்த விழாவை நடத்தி வருகிறது.
![]() |
இப்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு படையெடுத்தவண்ணம் உள்ளனர்.
இந் நிலையில் சாரல் விழா நாளை மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. விழாவிற்கு சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்குகிறார். மாவட்ட ஆட்சித் தலைவர் பிரகாஷ், மத்திய இணை அமைச்சர் திருமதி.ராதிகா செல்வி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைக்கிறார்.
இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன், அமைச்சர்கள் கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மைதீன்கான்,பூங்கோதை ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
நாளை முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை நீச்சல் போட்டி, கோலப் போட்டி, ஆணழகன் போட்டி, ஆடை அலங்கார போட்டி, ஓட்டப் பந்தயம், படகு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.













Click it and Unblock the Notifications