7 கி.மீ. தூரம் துரத்தி துரத்தி கொள்ளையனைஅடித்துக் கொன்ற பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

சேலம்:சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே லாரியிலிருந்து பொருட்களை திருட முயன்ற கொள்ளையனை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கற்களால் அடித்துக் கொலை செய்தனர். இன்னொருவனை துரத்திப் பிடித்தனர்.

வாழப்பாடி அருகே உள்ள திம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியில் இருந்த பொருட்களை திருடும் முயற்சியில் 9 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருந்தது.

இந்தக் கும்பலை அந்தக் கிராம மக்கள் பார்த்து விட்டனர். இதையடுத்து கொள்ளைக் கும்பலை கிராம மக்கள் வளைத்தனர். ஆனால் அவர்களிடமிருந்து கொள்ளையர்கள் தப்பி ஓடினர். ஆனாலும் விடாத கிராம மக்கள் கொள்ளைக் கும்பலைத் துரத்தினர்.

கிட்டத்தட்ட 7 கி.மீ தொலைவுக்கு கொள்ளையர்களை பொதுமக்கள் துரத்தினர். இதில் 2 பேர் சிக்கினர். மற்றவர்கள் தப்பிவிட்டனர்.

பிடிபட்ட இரு திருடர்களும், கத்தியால் கிராம மக்களை தாக்க முயன்றனர். இதனால் கிராம மக்கள் ெகாதிப்படைந்தனர். அத்தனை பேரும் சேர்ந்து கொள்ளையர்கள் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர்.

இதில் ஒருவர் மண்டை உடைந்து மயக்கமடைந்து கீழே விழுந்தார். இன்னொருவரை மடக்கிப் பிடித்த கிராம மக்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து பார்த்தபோது மயக்கமடைந்து கிடந்த கொள்ளையன் இறந்து விட்டான்.

இறந்த நபரின் பெயர் கிருஷ்ணமூர்த்தி. கூட்டாத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். பிடிபட்ட கொள்ளையன் பெயர் செந்தில்குமார். இவர் உடையாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். அவரை போலீஸார் கைது செய்தனர்.

கிராம மக்களிடம் சிக்கி கொள்ளையன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+