கொள்ளிடம் பாலத்தில் லாரி கவிழ்ந்துவியாபாரி, 65 ஆடுகள் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் இருந்து லாரி கவிழ்ந்ததில் ஆட்டு வியாபாரியும், 65 ஆடுகளும் பலியாயினர்.
தேனி மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்த பரசுராமன், செல்வராஜ் ஆகியோர் ஆடுகளை வாங்கி விற்று வந்தனர்.
![]() |
ஆந்திராவில் இருந்து 110 ஆடுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு தேனிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மணச்சநல்லூர் அருகே கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்தார் டிரைவர்.
இதையடுத்து லாரி பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இதில் பரசுராமன் பலியானார்.
மேலும் 65 ஆடுகளும் உடல் நசுங்கி பலியாயின













Click it and Unblock the Notifications