பெண்களை சவுக்கால் அடித்து பூசாரிகள் பூஜை!:திருச்சி அருகே வினோதம்!!
திருச்சி:திருச்சி அருகே ஒரு கோவிலில் பேய் பிடித்ததாக கூறப்படும் பெண்களை சவுக்கால் அடி அடி என அடித்து பூஜை நடந்தது.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே தும்பலம் என்ற ஊரில் சோழராசா கோவில் உள்ளது. இந்த கோவிலில் பெண்களுக்கு பேய் ஒட்டும் விழா பிரசித்தம்.
பேய் பிடித்தாக கூறப்படும் பெண் குடும்பத்தினர் பொங்கல் வைத்து பூஜை செய்வர். இந்தப் பூஜை இப்போது நடந்து வருகிறது.
முதலில் கோவில் பூசாரிகள் 6 பேர் கிராமத்தை சுற்றி வந்தனர். இதையடுத்து பேய் பிடித்தாக கூறப்படும் பெண்களை கோவில் முன் அமர வைக்கப்பட்டனர்.
இதையடுத்து 6 பூசாரிகளுக்கும் அருள் வந்து ஆடினர்.
உடுக்கை சத்தத்திற்கு ஏற்ப பூசாரி கையில் சவுக்குடன் ஆடினார். கூடவே பெண்களும் தலைவி கோலத்தில் ஆடினர்.
இதையடுத்து பூசாரிகள் சாட்டையை சுழற்றி சுழற்றி பெண்களை அடித்தனர். வலி தாங்க முடியாத 3 பெண்கள் மயக்கமடைந்தனர்.
பின்பு அவர்களது தலை முடியை பிடித்து கொண்டை போல போட்டு அதில் சிறிதளவு முடியை அறுத்து அருகில் உள்ள புளிய மரத்தில் ஆணி வைத்து அடித்தனர்.
பின்னர் பூசாரிகளின் கையில் இருந்த வேல், வாள், கம்பு, ஆகியவற்றை பெண்கள் தொட்டு கும்பிட்டு விட்டு பிறகு குளிக்கச் சென்றனர். மீண்டும் அந்த பெண்களை கோவிலுக்கு வரவழைத்து விபூதி, குங்கும் கொடுத்து அனுப்பி வைத்தனர் பூசாரிகள்.
இந்த நூதன சவுக்கடி பூஜை அந்தப் பகுதியில் நீண்ட காலமாக நடந்து வருகிறது.
ஒரு படத்தில் விவேக் இப்படிச் சொல்வார் - தெளசன்ட் பெரியார் வந்தாலும் ....!












Click it and Unblock the Notifications