களக்காடு முண்டன்துறை சரணாலயத்தில் புலிகள்!
நெல்லை:களக்காடு முண்டந்துறை சரணாலயத்தில் புலிகள் இருப்பது தனியார் தொண்டு நிறுவனம் அங்கு வைத்த கேமராவில் பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து சட்டமன்ற பொதுக் கணக்கு குழு ஆய்வு நடத்தியது. பின்னர் இக் குழுவின் தலைவர் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
![]() |
அடவி நயினார் அணை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. விவசாயிகளுக்கு போக குடிநீருக்கும் இந்த அணை உதவுகிறது.
பண்பொழி திருமலை குமாரசாமி கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதை சீரமைக்கவும், வாகனங்கள் மேலே செல்வது தொடர்பாகவும் முடிவெடுக்க அரசுக்கு பரிந்துரை செய்வோம்.
குற்றாலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ, அதே போலதான் இன்றும் உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் குற்றாலத்தை மேலும் அழகு படுத்த வேண்டும் என்று கருதுகிறோம்.
தற்போது ரூ.5 கோடியில் குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் செய்ய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இங்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தர குழு பரிந்துரை செய்யும்.
களக்காடு முண்டந்துறை சரணாலயத்தில் புலிகள் இருப்பது தனியார் தொண்டு நிறுவனம் அங்கு வைத்த கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக ஆய்வு நடத்த இந்திய வன உயிரின விஞ்ஞானிகள் வருகை தர உள்ளனர் என்றார்.
இந்த சரணாலயத்தில் இப்போது புலிகளே இல்லை என்று கூறப்பட்டு வரும் நிலையில் புலிகள் கேமராவில் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications