திருடனாக மாறிய போலீஸ் - மூதாட்டியிடம்சங்கிலி பறித்து சிக்கினார்
திருநெல்வேலி:நெல்லையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் தங்கச் செயினைப் பறித்த போலீஸ்காரரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
திருநெல்வேலி சிந்துபூந்துறையைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ஆறுமுகவடிவு (60). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத நபர் வீட்டிக்குள் நுழைந்து ஆறுமுக வடிவு அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியைப் முயற்சித்துள்ளார்.
ஆறுமுக வடிவு அலறவே அப்பகுதி மக்கள் ஓடி வந்துள்ளனர். பொது மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த நபர் தப்பி ஓடினார். ஆனாலும் விடாத மக்கள் அந்த நபரை வளைத்துப் பிடித்தனர்.
அவரை விசாரித்தபோது மதுரையைச் சேர்ந்த அமர்நாத் என்று தெரிய வந்தது. மேலும் அவர் ஒரு போலீஸ்காரர் என்றும் சஸ்பெண்ட் ஆனவர் என்தும் தெரிய வபந்தது.
இவருடன் கமுதியை சேர்ந்த மற்றொரு போலீஸ்காரர் பாலமுருகன் என்பவரும் கூட்டு சேர்ந்து பல்வேறு திருட்டுக்களை செய்து வந்துள்ளார். பாலமுருகனும் சஸ்பெண்ட் ஆனவர்தான்.
தலைமறைவாகி விட்ட பாலமுருகனை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications