கள் இறக்கிய இருவர் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை:நெல்லை மாவட்டத்தில் கள் இறக்கிய இரண்டுபேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரங்களிலிருந்து கள் இறக்குவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் பல அரசியல் பிரமுகர்களும், பல்வேறு அமைப்பினரும் கள்ளச் சாராய சாவை தடுக்க வேண்டுமெனில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன.
இந் நிலையில் நெல்லை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளான சிவகிரி, தேவிப்பட்டிணம், வண்ணாம்பாறை ஆகிய பகுதிகளில் திருட்டுத்தனமாக பலர் கள் இறக்கி வருகின்றனர்.
இந்தப் பகுதியில் போலீசார் சோதனை நடத்தி சிவகிரி பகுதியைச் சேர்ந்த ராமர், சமுத்திரம் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 71 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications