டிஎஸ்பி மீது மனித உரிமை ஆணையத்தில் புகார்
கரூர்:விவசாயியை தரக்குறைவாக பேசிய டி.எஸ்.பி மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இதையடுத்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு டி.எஸ்.பிக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கருர் மாவட்டம் லாலாபேட்டை பஞ்சபட்டி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது வயலில் பம்பு செட் மோட்டார் சமீபத்தில் காணாமல் போனது. இது சம்பந்தமாக லாலாபேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அப்போது குளித்தலை டிஎஸ்பி பாஸ்கரன் விவசாயி இளங்கோவனை தரக்குறைவாக திட்டியதோடு புகாரை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதனால் மன உளச்சலுக்கு ஆளான விவசாயி இளங்கோவன் குளித்தலை டிஎஸ்பி பாஸ்கரன் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.
இப்புகாரை ஏற்றுக்கொண்ட ஆணையம் விவசாயி இளங்கோவனை தரக்குறைவாக பேசிய பாஸ்கரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications