கிருஷ்ணகிரியில் அரவாணிகளின் நிர்வாண ரகளை!
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே சந்தைப் பகுதியில் அரவாணிகள் ஆடைகளை களைந்து நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
போச்சம்பள்ளி கிராமத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று வாரச்சந்தை கூடும். இந்த சந்தைக்கு சுற்று வட்டார கிராமங்களிலிருந்து விவசாயிகள் வந்து வியாபாரம் செய்வர்.
இந்த விவசாயிகள் கடைபோடும்போது அவர்களிடம் அரவாணிகள் மாமூல் கேட்டு தொல்லை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் சந்தை கூடியது.
அப்போது வேலூரைச் சேர்ந்த இரண்டு அரவாணிகள் சந்தைக்கு வந்து கடைக்காரர்களிடம் மாமூல் கேட்டுள்ளனர். கடைக்கு தலா 2 ரூபாய் கொடுத்துள்ளனர். ஆனால், அரவாணிகள் ஒரு கடைக்கு 5 ரூபாய் தர வேண்டும் என மிரட்டினர்.
அதை வியாபாரிகளும் விவசாயிகளும் ஏற்க மறுத்தபோது, மக்கள் கூடியிருந்த அந்த பொது இடத்தில் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்டனர்.
சந்தைக்கு வந்த பெண்கள் அரவாணிகளின் இந்த செயலால் சிதறி ஓடினர். பின்னர் போலீசார் வந்து அரவாணிகளை விரட்டியடித்தனர்.












Click it and Unblock the Notifications