6 வயது சிறுமி கொடூர கொலை-வாலிபர் கைது
சென்னை:சென்னை, வில்லிவாக்கத்தில் 6 வயது சிறுமி மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த பாபு-சாந்தி தம்பதிக்கு இரு மகள்கள், ஒரு மகன் இருந்தனர்.
இவர்களில் லதா(12), சுரேஷ்(10) ஆகியோர் 6 மற்றும் 5வது வகுப்பில் படித்து வருகிறார்கள். கடைசி மகள் பிரியா 1ம் வகுப்பு படித்து வந்தாள்.
![]() |
கடந்த 16ம் தேதி இரவு விளையாடச் சென்ற பிரியா வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் பிரியா கிடைக்காததால் தந்தை பாபு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரும் கடந்த 4 நாட்களாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் பாபுவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அய்யனார் என்பவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. ஆனால் அந்த வீட்டில் உள்ளவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை கோவிலுக்கு காதுகுத்து விழாவிற்கு சென்றுவிட்டனராம்.
இதனால் சந்தேகமடைந்த பாபு, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பூட்டியிருந்த வீட்டை உடைத்து பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
அய்யனாரின் வீட்டுக்குள் உடல் அழுகிய நிலையில் நிர்வாணமாக பிரியா கொலை செய்யப்பட்டு கிடந்தார். சிறுமியின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியைக் கொன்ற வாலிபர்:
இந்தக் கொலை தொடர்பாக விஜய்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பாபு வசிக்கும் அதே காம்பவுண்டில் தான் வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் ஒரே காம்பவுண்டில் குடியிருப்பதால் கழிப்பறை பொதுவாக உள்ளதாம். அதை பயன்படுத்தவதில் அடிக்கடி தகராறு வருமாம். இதற்கிடையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு நடந்த சண்டையில் விஜயகுமாரை, பாபு கத்தியால் குத்திவிட்டாராம்.
இந்த பிரச்சனை போலீஸ் வரை சென்று இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கப்பட்டதாம். இருப்பினும் தன்னை தாக்கிய பாபுவுக்கு பாடம் கற்பிக்க எண்ணி அவரது மகள் பிரியாவை கொடூரமாக கழுத்தை நெரித்தும், தலையை சுவற்றில் மோதச் செய்தும் கொன்றுள்ளார்.
கொன்ற பிணத்தை என்ன செய்வது எனத் தெரியாமல் ஆளில்லாத அதே காம்பவுண்டை சேர்ந்த அய்யனாரின் வீட்டுக்குள் போட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications