ஜெர்மனியில் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல்
மியூஜெலின்:ஜெர்மனியில் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை கிழக்கு ஜெர்மனியின் மயூஜெலின் நகரில் இச் சம்பவம் நடந்தது. இந்திய வாலிபர்கள் ஒன்று கூடி இந்திய விழாவை நடத்திக் கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் சுமார் 50 ஜெர்மனியர்கள் அங்கு வந்து வாக்குவாதத்தில் இறங்கினர்.
பின்னர் இந்தியர்களை கடுமையாகத் தாக்கினர். இதையடுத்து இந்தியர்கள் கலைந்து ஓட அவர்களை விரட்டி விரட்டி அந்தக் கும்பல் தாக்கியது. இதைத் தொடர்ந்து தங்களை காத்துக் கொள்ள அப் பகுதியில் உள்ள இந்தியருக்குச் சொந்தமான உணவு விடுதியில் இந்திய வாலிபர்கள் புகுந்தனர்.
![]() |
அவர்களை காப்பதற்காக விடுதியின் கதவைப் பூட்டினார் அதன் உரிமையாளர். ஆனாலும் கதவை உடைத்துக் கொண்டு உள்ள புக அந்தக் கும்பல் முயன்றது. அது முடியாமல் போகவே அந்த உணவு விடுதி உரிமையாளரின் காரை உடைத்து சேதப்படுத்தினர்.
இந் நிலையில் போலீசார் அங்கு வந்து கும்பலை விரட்டினர். அவர்களையும் கும்பல் தாக்கியதில் 2 போலீசார் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் மொத்தம் 8 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய அனைவரும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வலது சாரிகளான இவர்கள் வெளிநாட்டினர் குறிப்பாக வெள்ளைத் தோல் அல்லாதோர் ஜெர்மனியில் நுழைவதை எதிர்ப்பவர்கள்.
இச் சம்பவம் தொடர்பாக சில வாலிபர்களை கண்துடைப்புக்காக கைது செய்த ஜெர்மன் போலீசார் பின்னர் அவர்களை விடுவித்துவிட்டனர்.













Click it and Unblock the Notifications