தமிழ் எம்.பியின் தம்பி சுட்டுக் கொலை:கருணா குழுவினர் அட்டகாசம்
மட்டக்களப்பு:இலங்கை தமிழ் எம்.பி. ஜெயானந்தமூர்த்தியின் சகோதரர் தியாகராஜா அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை கருணா குழுவினர்தான் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இலங்கை தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த எம்.பி. ஜெயானந்த மூர்த்தி. இவர் மட்டக்களப்பு எம்.பி. ஆவார். இவரது சகோதரர் தியாகராஜா.
வாழைச்சேனை அருகே உள்ள ஓடமாவடி என்ற இடத்தில் திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் அவரை சில அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பினர்.
கடந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி ஜெயானந்தமூர்த்தி மீது கருணா குழுவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதில் மூர்த்தி, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தப்பினர். தொடர்ந்து கருணா குழுவினரால் ஜெயானந்தமூர்த்தி குடும்பத்திற்கு கொலை மிரட்டல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தியாகராஜா கொல்லப்பட்டுள்ளார். 54 வயதாகும் தியாகராஜாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜெயானந்தமூர்த்தியின் மூன்றாவது சகோதரர் இவர். வாழைச்சேனையில் உள்ள காகித ஆலையில் வேலை பார்த்து வந்தார்.
அவரது உடல் தற்போது வாழைச்சேனை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications