பலாலி விமான தளம் மீது புலிகள் கடும் தாக்குதல்
கொழும்பு:யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமானப் படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் இன்று ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இன்று காலை 8.45 மணிக்கு நீண்ட தூர ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் விடுதலைப் புலிகள் பலாலி தளம் மீது குண்டு வீசித் தாக்கினர். இதில் ராணுவத் தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மொத்தம் 10 குண்டுகள் வந்து விழுந்தன.
பூனேரி பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு ராணுவத் தரப்பில் பதிலடித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆர்ட்டில்லரி தாக்குதலிலும் விடுதலைப் புலிகள் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது பதட்டம் தணிந்துள்ளது என்றார்.
இந்தத் தாக்குதல் குறித்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சிலர் தொலைபேசி மூலம் தெரிவிக்கையில், இன்று காலை முதல் அரசுப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. அப்பகுதி முழுவதும் பெரும் பதட்டமாக உள்ளது.
விடுதலைப் புலிகள் தீவிர ஆர்ட்டில்லரி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை என்றனர்.
இந்தப் புதிய தாக்குதலால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications