நெல்லை விட்டு விட்டு காய்கறிக்கு மாறவிவசாயிகளுக்கு அமைச்சர் யோசனை!

Subscribe to Oneindia Tamil

திருச்சி:காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள், நெல்லை மட்டுமே விதைப்பதை விட்டு விட்டு விவசாயிகள் காய்கறிகள் பயிரிடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் யோசனை தெரிவித்துள்ளார்.

திருச்சி அருகே திருவளர்ச்சோலை என்ற இடத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில்தான் இந்த யோசனையை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், விவசாயிகள் குறிப்பாக காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் நெல் பயிரிடுவதை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. அதை விட்டு விட்டு காய்கறிகள் பயிரிடுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். காய்கறிகளுக்கு குறைந்த அளவிலான தண்ணீரே தேவைப்படும்.

மேலும் விவசாய நடவடிக்கைகளுக்கு நவீன தொழில்நுட்பங்களையும் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான உதவிகளைச் செய்ய அரசு தயாராக உள்ளது.

வளர்ந்த நாடுகளில் உள்ளதை விட நமது நாட்டில் நீரும், நிலமும் திருப்திகரமான அளவில் உள்ளது.

உயிரி உரங்களை அதிக அளவில் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். இதற்காக தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் உதவியை விவசாயிகள் நாடலாம் என்றார் அமைச்சர் ஆறுமுகம்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வாச்சானியும் பங்கேற்றார். பின்னர் சமீபத்திய மழையால் கிள்ளிக்கூடு, உத்தமர்சீலி ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர் பார்வையிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+