டாஸ்மாக் பார் ஏலம் எடுக்க ஆர்வம் இல்லை!
கரூர்:தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு அருகே அமைக்கப்படும் பார்களை ஏலத்தில் எடுக்க யாரும் ஆர்வம் காட்டாததால் பார்கள் ஏலம் போவதில் படு மந்த நிலை காணப்படுகிறது.
தமிழகத்தில் மது வகைகளை அரசு டாஸ்மாக் கடைகள் மூலம் சப்பளை செய்து வருகின்றது. இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் வருகின்றது. டாஸ்மாக் கடை அருகிலேயே குடிமகன்கள் நலன் கருதி பார்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
கடைகளில் பணியாற்றுபவர்களே பார்களை ஒப்பந்த அடிப்படை முறையில் நடத்தி வந்தனர். இந்த நிலையில் பார்களுக்கான ஒப்பந்த காலம் பல மாவட்டங்களில் முடிவடைந்தது விட்டது. இதனால் புதிய டெண்டர் கோரப்பட்டது.
ஆனால் டாஸ்மாக் பார்களுக்கான ஏளக் கட்டணம் அதிகம் என்று கருதிய தனியார் யாரும் ஏலத்தில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஒரு சில பார்களே ஏலத்தில் போனது. இதனால் பல இடங்களில் மறு ஏலம் அறிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications