நெல்லை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு அவுட்!
நெல்லை:நெல்லை மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக இன்றும் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
நெல்லை அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வாகைக் குளத்தை சேர்ந்தவர் ராஜன் என்ற பட்டமூர்த்தி. இவர் அப்பகுதியில் பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கும் கடந்த சில காலமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை பட்டமூர்த்திக்கும், ஐயப்பனுக்கும் பயங்கர வாக்குவாதம் நடந்தது. கடைசியில் இந்த வாதம் கைகலப்பானது. இந்த சண்டையில் ஆத்திரமடைந்த ஐயப்பன், தான் வைத்திருந்த அரிவாளால் பட்டமூர்த்தியை வெட்டியுள்ளார்.
வெட்டுபட்ட பட்டமூர்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து அம்பாசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளி ஐயப்பனை தேடி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதுவரை 12 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications