ஜனாதிபதி மாளிகையில் உறவினர்களுக்குவேலை: பிரதிபா மீது குற்றச்சாட்டு
டெல்லி:ஜனாதிபதி மாளிகையில் உள்ள பல வேலைகளுக்கு தன் உறவினர்களுக்கே முன்னுரிமை கொடுத்து வருவதாக ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜனாதிபதி பெயருக்கு பிரதிபா பாட்டீலின் பெயர் அறிவித்ததிலிருந்தே அவர் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் உண்டாயின.
![]() |
பாஜக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் பல குற்ற்ச்சாட்டுகளை கூறிவந்தாலும் அதையும் மீறி குடியரசு தலைவர் தேர்தலில் அபார வெற்றி பெற்றார்.
ஜனாதியான பின்பு குடியரசுத் தலைவர் மாளிகையில் குடும்பத்தோடு குடியேறினார். இந்நிலையில் அவர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் அவரது மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், அவருக்கு கீழ் ஏற்கனவே பணிபுரிந்தவர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தி வருகிறார்.
தற்போது ஜனாதிபதி மாளிகையின் சிறப்பு அதிகாரியாக விக்ராந்த் தத்தா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதிபா பாட்டீல் கவர்னராக இருந்தபோது அதிகாரியாக இருந்தவர்.
தற்போது பிரதிபா பாட்டீல் ஜனாதிபதியான பின்பு மீண்டும் அவரது சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications