உச்சநீதிமன்ற நீதிபதியானார் சதாசிவம்:தமிழகத்தைச் சேர்ந்தவர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் இன்று பதவியேற்றார்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீதிபதி பி.சதாசிவம். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 11 ஆண்டுகள் பணியாற்றினார். சமீபத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந் நிலையில் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் தனது புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
சதாசிவத்தையும் சேர்த்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 26 ஆகும். 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.












Click it and Unblock the Notifications