சிவகங்கை முருகன் கொலை:கைதானவர்களுக்கு ஜாமீன் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான திமுக கவுன்சிலர் மணிமுத்து உள்ளிட்ட 10 பேருக்கும் ஜாமீன் வழங்க மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் மறுத்து விட்டது.
![]() |
சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் ரிமோட் கண்ரோல் மூலம் காரில் குண்டு வெடிக்கச் செய்து படு கொலை செய்யப்பட்டார். இதில் மாவட்ட திமுக துணை செயலாளர் மணிமுத்து, திமுக கவுன்சிலர் மந்தக்காளை உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறையில் உள்ள இவர்கள் தங்களுக்கு ஜாமீன் கோரி சிவகங்கை மாவட்ட செசன்ஸ் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இவர்களை வெளியே விட்டால் வழக்கின் தன்மை பாதிக்கும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதை விசாரித்த நீதிபதி தசிர் அகமது ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.













Click it and Unblock the Notifications