வறுமை: குழந்தைகளைக் கொன்று தாயும் தற்கொலை!
Subscribe to Oneindia Tamil
மதுரை:மதுரையில் வறுமை காரணமாக தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை திருநகரை அடுத்த அங்கயற்கண்ணி நகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு சுகுமாறன், அருண் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
கந்தசாமி கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சரியான முறையில் வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் இவரது வீட்டில் வறுமை வறுத்தெடுத்தது.
மனம் உடைந்த தனலட்சுமி, வறுமை தன்னோடு ஒழியட்டும் தனது குழந்தைகள் சுகுமாறன், அருண் ஆகியோரும் வறுமையில் சிக்கிவிடக் கூடாது என நினைத்து தனது 2 குழந்தைகளுக்கும் சாப்பாட்டில் விஷம் வைத்து கொடுத்துள்ளார். தானும் அதே விஷத்தை சாப்பிட்டார். இதில் மூன்று பேரும் பரிதாபமாக இறந்தனர்.












Click it and Unblock the Notifications