பழனியைக் கலக்கிய பால் சத்தியம்!
பழனி:திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நடந்த பால் சத்தியம் நிகழ்ச்சியால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி அருகே பெருமாள் புதூர் அம்மாபட்டியில் அம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் காட்டு நாயக்கன் சமுகத்தவர்கள் கும்பிட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆணி மாதம் கோவில் விழா கொண்டாடுவர். இதற்காக கருர், திருச்சி, திருப்பூர், திண்டுக்கல் போன்ற வெளியூரில் இருந்து பலரும் வருகை தருவார்கள்.
அப்போது கோவில் முன்பு வைக்கப்படும் பாலில் கை வைத்து சத்தியம் செய்வர். உறவினர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பேசாமல் இருந்தால் அவர்களை அழைத்து பாலில் கை வைத்து சத்தியம் செய்வர்.
அப்படி செய்வதன் முலம் அவர்களுக்குள் இருந்த பகை மறைந்து விடும் என்பது காட்டு நாயக்கன் சமூகத்தவரின் நம்பிக்கை. இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக இம்முறை கூட்டம் அதிகம் காணப்பட்டது. இந்த பால் சத்தியம் நிகழ்ச்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications