செயற்கை கருவூட்டல் - ஒரே பிரசவத்தில்4 குழந்தைகள் பெற்ற உசிலை பெண்
உசிலம்பட்டி:மதுரை அருகே உசிலம்பட்டியில் செயற்கைக் கருவூட்டல் மூலம் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றுள்ளார் ஒரு பெண்.
மதுரை, உசிலம்பட்டியை அடுத்த கிழப்புதூரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி நதியா. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்களாகிறது. ஆனால் குழந்தைப் பேறு ஏற்படவில்லை.
இதனால் தனியார் மருத்துவமனையை அணுகினர். அங்கு நதியாவைப் பரிசோதித்த டாக்டர்கள், செயற்கைக் கருவூட்டலுக்குப் பரிந்துரைத்தனர்.
இதையடுத்து வெங்கடேஷின் உயிரனுக்கள் எடுக்கப்பட்டு ஊசி மூலம் நதியாவின் கர்ப்பப் பையில் செலுத்தப்பட்டது. இதில் நதியா கர்ப்பமடைந்தார்.
இந் நிலையில், அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் நான்கு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.
இதில் ஒரு குழந்தை எடைக்குறைவு காரணமாக பிறந்தவுடனேயே மரணமடைந்தது. ஆனால் மற்ற மூன்று குழந்தைளும் நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
செயற்கைக் கருவூட்டல் மூலம் நான்கு குழந்தைகள் பிறப்பது அரிதான ஒன்றாகும்.












Click it and Unblock the Notifications