என்.ஆர்.ஐ. கணவர்களின் கொடுமைகளிலிருந்துமனைவிகளைக் காக்க தனி சட்டம்
ஹைதராபாத்:வெளிநாடு வாழ் இந்திய கணவர்களால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு உதவ புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வேலை பார்த்து வரும் இந்திய ஆண்களில் பெரும்பாலானோர் தங்களது மனைவிகளை பலவிதங்களிலும் கொடுமைப்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதுபோன்று வெளிநாடு வாழ் இந்தியக் கணவர்களால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை பஞ்சாபில்தான் அதிகம் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஆந்திரா உள்ளது.
இதுபோன்ற கொடுமைக்கார கணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டு வர வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்த யோசனைகளைத் தெரிவிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் இத்துறை கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து ஆந்திர மாநில உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், திருமணங்கள் அனைத்தும் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் கல்யாணத்திற்குப் பிறகு மனைவிகளை விட்டு விட்டு ஓடி விடும் கணவர்களின் கொட்டத்தை அடக்க முடியும். பாதிக்கப்படும் பெண்களுக்கு நிவாரணம் தேடித் தர முடியும்.
மனைவிகளைக் கொடுமைப்படுத்தும், சித்திரவதைப்படுத்தும் ஆண்களின் பாஸ்போர்ட்டுளை முடக்கும் வகையில் பாஸ்போர்ட் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். இதன் மூலம் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி விடாமல் தடுக்க முடியும் என்றனர்.
பல என்.ஆர்.ஐ கணவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், விசா பெறத் தேவைப்படுவதாக கூறி தங்களது திருமண சான்றிதழ்களை மனைவிகளிடமிருந்து நைசாக வாங்கிக் கொண்டு பறந்து விடுகிறார்கள். இதனால் அப்பாவி மனைவிமார்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
ஆந்திராவில் மட்டும் இதுவரை தவறு செய்து விட்டு வெளிநாடுளுக்குத் தப்பி விட்ட என்.ஆர்.ஐ கணவர்களைக் கைது செய்ய, இன்டர்போல் அமைப்பு 320 ரெட் அலர்ட் நோட்டீஸ்களை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
என்.ஆர்.ஐ கணவர்களுடன் சேர்ந்து வாழ விரும்பி அவர்களுடன் வெளிநாடுளுக்குச் சென்றுள்ள பல பெண்கள் அங்கு சித்திரவதை வாழ்க்கையைத்தான் அனுபவித்து வருகின்றனர். பலர், தாயகம் திரும்பி விவாகரத்து செய்து கொண்டு வேறு வாழ்க்கையைப் பார்த்துக் கொள்கின்றனர்.
என்.ஆர்.ஐ கணவர்களால் பாதிக்கப்படும் மனைவியரின் எண்ணிக்கை நாட்டிலேயே பஞ்சாப் மாநிலத்தில்தான் அதிகம். அதேசமயம் இன்டர்போல் போலீஸால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆந்திராவில்தான் அதிகம்.
வெளிநாடு வாழ் இந்தியக் கணவர்களின் செயல்பாடுகள் குறித்தும், புகார்கள் குறித்தும் கவனிப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் தனிப் பிரிவுகளை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கணவர்களால் கைவிடப்படும் மனைவிகளுக்கு மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சகம் நிதியுதவியும் செய்து வருகிறது.
இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காகவே தற்போது கடுமையான சட்டம் ஒன்றைக் கொண்டு வர மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications