என்.ஆர்.ஐ. கணவர்களின் கொடுமைகளிலிருந்துமனைவிகளைக் காக்க தனி சட்டம்
ஹைதராபாத்:வெளிநாடு வாழ் இந்திய கணவர்களால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு உதவ புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வேலை பார்த்து வரும் இந்திய ஆண்களில் பெரும்பாலானோர் தங்களது மனைவிகளை பலவிதங்களிலும் கொடுமைப்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதுபோன்று வெளிநாடு வாழ் இந்தியக் கணவர்களால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை பஞ்சாபில்தான் அதிகம் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஆந்திரா உள்ளது.
இதுபோன்ற கொடுமைக்கார கணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டு வர வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்த யோசனைகளைத் தெரிவிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் இத்துறை கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து ஆந்திர மாநில உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், திருமணங்கள் அனைத்தும் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் கல்யாணத்திற்குப் பிறகு மனைவிகளை விட்டு விட்டு ஓடி விடும் கணவர்களின் கொட்டத்தை அடக்க முடியும். பாதிக்கப்படும் பெண்களுக்கு நிவாரணம் தேடித் தர முடியும்.
மனைவிகளைக் கொடுமைப்படுத்தும், சித்திரவதைப்படுத்தும் ஆண்களின் பாஸ்போர்ட்டுளை முடக்கும் வகையில் பாஸ்போர்ட் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். இதன் மூலம் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி விடாமல் தடுக்க முடியும் என்றனர்.
பல என்.ஆர்.ஐ கணவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், விசா பெறத் தேவைப்படுவதாக கூறி தங்களது திருமண சான்றிதழ்களை மனைவிகளிடமிருந்து நைசாக வாங்கிக் கொண்டு பறந்து விடுகிறார்கள். இதனால் அப்பாவி மனைவிமார்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
ஆந்திராவில் மட்டும் இதுவரை தவறு செய்து விட்டு வெளிநாடுளுக்குத் தப்பி விட்ட என்.ஆர்.ஐ கணவர்களைக் கைது செய்ய, இன்டர்போல் அமைப்பு 320 ரெட் அலர்ட் நோட்டீஸ்களை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
என்.ஆர்.ஐ கணவர்களுடன் சேர்ந்து வாழ விரும்பி அவர்களுடன் வெளிநாடுளுக்குச் சென்றுள்ள பல பெண்கள் அங்கு சித்திரவதை வாழ்க்கையைத்தான் அனுபவித்து வருகின்றனர். பலர், தாயகம் திரும்பி விவாகரத்து செய்து கொண்டு வேறு வாழ்க்கையைப் பார்த்துக் கொள்கின்றனர்.
என்.ஆர்.ஐ கணவர்களால் பாதிக்கப்படும் மனைவியரின் எண்ணிக்கை நாட்டிலேயே பஞ்சாப் மாநிலத்தில்தான் அதிகம். அதேசமயம் இன்டர்போல் போலீஸால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆந்திராவில்தான் அதிகம்.
வெளிநாடு வாழ் இந்தியக் கணவர்களின் செயல்பாடுகள் குறித்தும், புகார்கள் குறித்தும் கவனிப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் தனிப் பிரிவுகளை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கணவர்களால் கைவிடப்படும் மனைவிகளுக்கு மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சகம் நிதியுதவியும் செய்து வருகிறது.
இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காகவே தற்போது கடுமையான சட்டம் ஒன்றைக் கொண்டு வர மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications