அபுதாபிக்குச் செல்லும் இந்திய போர்க் கப்பல்கள்
அபுதாபி:நல்லெண்ண பயணாக இந்திய கடற்படையின் இரு போர்க் கப்பல்கள் அபுதாபிக்கு வருகை தரவுள்ளன.
இந்தியாவின் மேற்கு கடற்படை கமாண்டைச் சேர்ந்த ஐ.என்.எஸ். ராஜ்புத், கிழக்கு கமாண்டைச் சேர்ந்த ஐ.என்.எஸ். பேட்வா ஆகிய இரு கப்பல்களும் நல்லெண்ண பயணமாக அபுதாபிக்கு வருகிற 27ம் தேதி முதல் 30ம் தேதி விஜயம் செய்யவுள்ளன.
இத்தகவலை அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த இரு கப்பல்களும் முறையே மும்பை மற்றும் விசாகப்பட்டனத்திலிருந்து அபுதாபிக்கு வருகின்றன.
இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே, கலாச்சாரம் மற்றும் கடல் பாரம்பரியத்திற்க வலு கூட்டும் வகையில் இந்த போர்க் கப்பல்கள் வருகின்றன.
வளைகுடா நாடுகளுக்கு இதற்கு முன்பும் பலமுறை இந்திய போர்க் கப்பல்கள் வந்துள்ளன. இப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவதை உறுதி செய்யும் வகையில் இந்தியக் கப்பல்கள் அங்கு வந்துள்ளன.












Click it and Unblock the Notifications