எருமையிடம் மனு கொடுத்த பாமக எம்பி, எம்எல்ஏ
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:தர்மபுரி வானொலி நிலையத்தை திறக்க கோரி பாமகவினர் எருமையிடம் மனு கொடுத்தனர்.
தர்மபுரி அதியமான் கோட்டையில் தொலைக்காட்சி வானொலி நிலையம் கட்டப்பட்டு பல வருடங்களாகின்றன. ஆனால் அந்த வானொலி நிலையம் செயல்படவில்லை.
இதற்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் பலனில்லாததால் வானொலி நிலையத்தை திறக்ககோரி பாமகவினர் எருமையிடம் மனு கொடுத்தனர்.
இந்த போராட்டத்திற்கு பாமக எம்.பி. செந்தில், எம்எல்ஏ வேலுச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
பாமகவினர் 4 எருமைகளை கொண்டு வந்தனர். அதன் கழுத்தில் பலங்கால ரேடியோ பெட்டிகளை கட்டி தொங்கவிட்டு அவற்றின் கொம்புகளில் ஏராளமான மனுக்களையும் கட்டி தொங்க விட்டனர். அத்துடன் எருமைகளிடம் ஒவ்வொருவராக சென்று மனு கொடுத்தனர்.
இந்த நூதன போராட்டத்தால் அங்கு பெறும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications