சென்னை தியேட்டர்களில் மெட்டல் டிடெக்டர்கள்!
சென்னை:சென்னை நகரில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் இன்று முதல் மெட்டர் டிடெக்டர் கருவிகள் கொண்டு ரசிகர்களை சோதனையிட உத்தரவிடப்பட்டுள்ளது. சோதனைக்குப் பின்னரே ரசிகர்கள் தியேட்டர்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஹைதராபாத்தில் உள்ள லும்பினி பார்க் மற்றும் கோகுல்சாட் ஆகிய இரு இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளே இதற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிரது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், வர்த்தக மையங்கள், தியேட்டர்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரக் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை நகரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது.
அதில் ஒரு பகுதியாக சென்னை நகரில் உள்ள தியேட்டர்களில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் கருவியான மெட்டர் டிடெக்டர்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை நகர தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் கூறுகையில், தியேட்டர்களில் அதிக அளவிலான கண்காணிப்பை மேற்கொள்ளும்படி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ரசிகர்கள் மீது தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் போலீஸார் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு ஷோ முடிந்த பின்னரும் தியேட்டர் முழுவதும் தீவிர சோதனை நடத்த வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் அவர்களை உடனே வெளியே அனுப்ப வேண்டும் அல்லது காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தியேட்டர் வளாகத்தில் கேட்பாரின்றி நீண்ட நேரம் நிற்கும் வாகனங்கள் குறித்து காவல்துறைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
தியேட்டர்களின் அனைத்து வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவியைப் பொருத்த வேண்டும். தியேட்டர்களுக்குள் பைகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அப்படியே கொண்டு போக விரும்பினால் அவற்றைத் திறந்து காட்டி ஆட்சேபனை இல்லை என்றால்தான் உள்ளே கொண்டு போக அனுமதிக்கப்படும்.
இந்த நடவடிக்கைகள் இன்று முதல் சென்னை நகரில் அமலுக்கு வருகிறது என்றார் ராமநாதன்.
மெட்டல் டிடெக்டர் கருவிகளைப் பொருத்தும் நடவடிக்கை படிப்படியாக வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட பிற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படக் கூடும் என்று தெரிகிறது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இன்றும் மழை இருக்கு.. அடுத்த ஒரு வாரம் கிளைமேட் எப்படி.. வானிலை அப்டேட் -
இதெல்லாம் உண்மையான ரேட் இல்லை.. இனிமேல்தான் இருக்கு.. தங்கம் விலையில் கதி கலங்க வைத்த நிபுணர்கள் -
தை 1 தான் தமிழ் புத்தாண்டு.. தமிழ் அறிஞர்கள் சொன்னது ஏன் தெரியுமா? முழு விவரம் -
சென்னையில் பெண்களிடம் தங்க நகை பறிக்கும் நயவஞ்சக நளினிகள்.. நம்பவே முடியாத தில்லாலங்கடி பாணி -
ஆபரேஷன் சக்ஸஸ்.. இந்தியாவிலேயே முதல்முறை.. சென்னையில் நடந்த தரமான சம்பவம்.. சாதிச்சிட்டாங்களே! -
வில்லிவாக்கம் பம்பிங் ஸ்டேஷனில் திருட்டுத்தனம்.. யார் அந்த சென்னை மெட்ரோ அதிகாரி? அறப்போர் இயக்கம் -
கடுங்குளிரில் சிக்கிய சென்னை.. சட்டென சரிந்த வெப்பம்.. அப்போ பொங்கலன்று கிளைமேட் எப்படி இருக்கும்? -
சென்னையில் ஒரு டைம் டிராவல்.. விண்டேஜ் பஸ்சில் ஜாலியாக சுற்றலாம்.. சுற்றுலா வருபவர்களுக்கு செம சான்ஸ் -
பொங்கல் சிறப்பு ரயில்கள் ரத்து! சென்னை - கோவை ரூட் ரயில்கள்.. தெற்கு ரயில்வே அதிரடி முடிவு -
Chennai Update: பயணிகளின் கனிவான கவனத்திற்கு! மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்! பொங்கல் நேரத்தில் வெளியான அறிவிப்பு! -
44 சிகரெட்டுகளை பிடிப்பதற்கு இணையாக அதிகரித்த காற்று மாசு! சென்னை மக்களே உஷார்! -
வங்கியில் வேலை.. தமிழகத்திலும் பணியிடம் இருக்கு! லட்சங்களில் சம்பளம்.. பட்டைய கிளப்புங்க












Click it and Unblock the Notifications