சென்னை தியேட்டர்களில் மெட்டல் டிடெக்டர்கள்!
சென்னை:சென்னை நகரில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் இன்று முதல் மெட்டர் டிடெக்டர் கருவிகள் கொண்டு ரசிகர்களை சோதனையிட உத்தரவிடப்பட்டுள்ளது. சோதனைக்குப் பின்னரே ரசிகர்கள் தியேட்டர்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஹைதராபாத்தில் உள்ள லும்பினி பார்க் மற்றும் கோகுல்சாட் ஆகிய இரு இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளே இதற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிரது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், வர்த்தக மையங்கள், தியேட்டர்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரக் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை நகரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது.
அதில் ஒரு பகுதியாக சென்னை நகரில் உள்ள தியேட்டர்களில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் கருவியான மெட்டர் டிடெக்டர்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை நகர தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் கூறுகையில், தியேட்டர்களில் அதிக அளவிலான கண்காணிப்பை மேற்கொள்ளும்படி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ரசிகர்கள் மீது தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் போலீஸார் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு ஷோ முடிந்த பின்னரும் தியேட்டர் முழுவதும் தீவிர சோதனை நடத்த வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் அவர்களை உடனே வெளியே அனுப்ப வேண்டும் அல்லது காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தியேட்டர் வளாகத்தில் கேட்பாரின்றி நீண்ட நேரம் நிற்கும் வாகனங்கள் குறித்து காவல்துறைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
தியேட்டர்களின் அனைத்து வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவியைப் பொருத்த வேண்டும். தியேட்டர்களுக்குள் பைகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அப்படியே கொண்டு போக விரும்பினால் அவற்றைத் திறந்து காட்டி ஆட்சேபனை இல்லை என்றால்தான் உள்ளே கொண்டு போக அனுமதிக்கப்படும்.
இந்த நடவடிக்கைகள் இன்று முதல் சென்னை நகரில் அமலுக்கு வருகிறது என்றார் ராமநாதன்.
மெட்டல் டிடெக்டர் கருவிகளைப் பொருத்தும் நடவடிக்கை படிப்படியாக வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட பிற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படக் கூடும் என்று தெரிகிறது.
-
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications