கட்டாய கிராம சேவை: மருத்துவ மாணவர்கள்br/வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

Subscribe to Oneindia Tamil


சென்னை:

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸின் கட்டாய கிராம சேவை உத்தரவை கண்டித்து தமிழகத்தில் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவப் படிப்பை முடிப்பவர்கள் கட்டாயம் ஒரு ஆண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இதற்கு மருத்துவக் கல்லூரி மாணவர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமைச்சர் அன்புமணியின் உத்தரவைக் கண்டித்து போராட்டத்தில் அவர்கள் குதித்துள்ளனர். முதலில் அரசு மருத்துவமனைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிராமப்புறங்களில் போய் சேவை செய்யத் தயார். ஆனால் எங்களை கூலித் தொழிலாளர்கள் போல பாவிக்காமல், நிரந்தரப் பணி வழங்க அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதுவரை கட்டாய கிராம சேவை என்ற திட்டத்தை ஏற்க மாட்டோம், தொடர்ந்து போராடுவோம் என மாணவர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+