மணல் கடத்தல் கும்பலுக்கு உதவிய 'காக்கிகள்':br/அதிரடியாய் சஸ்பெண்ட் செய்த எஸ்பி
மானாமதுரை:
மானாமதுரை மற்றும் திருபுவனம் பகுதிகளில் வைகை ஆற்றில் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இரண்டு போலீசாரை மாவட்ட எஸ்பி சஸ்பெண்டு செய்துள்ளார்.
இந்தப் பகுதிகளில் வைகை ஆற்றில் தொடர்ந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய்துறையினர் திடீர் சோதனை நடத்தும்போதெல்லாம் மணல் கடத்துபவர்கள் எளிதில் தப்பி வந்தனர்.
இது குறித்து சந்தேகம் அடைந்த எஸ்பி கண்ணன், உளவுப் பிரிவினரின் உதவியோடு ரகசிய விசாரணை நடத்தினார். அப்போது போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய்துறையினரின் ரெய்டு குறித்து மணல் கடத்தல் கும்பலுக்கு செல்போன் மூலம் முன்கூட்டியே தகவல் தந்து வந்தது போலீசார் எனத் தெரியவந்தது.
மேலும் தீவிரமாக விசாரணை நடத்தியதில் திருபுவனத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் ராஜ்குமார், மற்றும் சிவகங்கை ஆயுதப்படை டிரைவர் பாஸ்கர் ஆகியோர் மாட்டினர்.
இவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்தார் எஸ்பி.












Click it and Unblock the Notifications