2 குழந்தைகளுடன் கள்ளக் காதலர்கள் தற்கொலை

Subscribe to Oneindia Tamil


பழனி:

கள்ளத் தொடர்புக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கள்ளக் காதலர்கள் இரு குழந்தைளுடன் தற்கொலை செய்து கொண்டனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் நல்லுசாமி. இவருக்கு கல்யாணமாகி குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் நல்லுச்சாமிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த கணவரை இழந்த விஜயா என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. விஜயாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இருவருக்கும் இடையிலான கள்ளத் தொடர்பு முற்றி மனைவி, குழந்தையை விட்டு விட்டு விஜயாவுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்தார் நல்லுச்சாமி. இதற்கு விஜயா மற்றும் நல்லுச்சாமியின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் விரக்தியடைந்த நல்லுச்சாமியும், விஜயாவும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் பழனிக்கு வந்தனர். அங்கு விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கினர்.

பின்னர் இரவில் உணவில் விஷத்தைக் கலந்து இரு குழந்தைகளுக்கும் கொடுத்தனர். பின்னர் இருவரும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+