மாணவிகளிடம் சில்மிஷம்: தலைமை ஆசிரியரைbr/மாற்றக் கோரி பெற்றோர்கள் போர்க்கொடி!
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபடும் தலைமை ஆசிரியரை உடனடியாக மாற்றக் கோரி மாணவ, மாணவியர், பெற்றோர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மோகனூர் யூனியனுக்குட்பட் ஒலப்பாளையத்தில் ஊராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. இதில் 69 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு சதாசிவம் என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார்.
இவர் பள்ளிக்கு சரியாக வருவதில்லை. வந்தாலும் குடித்து விட்டு தள்ளாடியபடிதான் வருவாராம். மேலும் குடிபோதையில் மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷத்திலும் ஈடுபடுவாராம்.
நேற்றும் குடித்து விட்டு பள்ளிக்கு வந்ததோடு, மாணவி ஒருவரிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
இதையடுத்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் இதுகுறித்துத் தெரிவித்தார். கொதிப்படைந்த அந்த மாணவியின் பெற்றோரும், பிற மாணவிகளின் பெற்றோர்களும் திரண்டு ஆட்சித் தலைவரிடம் புகார் மனு கொடுத்தனர். மேலும் தலைமை ஆசிரியரை உடனடியாக மாற்றக் கோரி பள்ளிக்கு பூட்டுப் போடும் போராட்டத்தையும் நடத்த அவர்கள் தீர்மானித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications