3 விபத்துக்களில் 16 பேர் பலி
பெங்களூர்:
கர்நாடக மாநிலத்தில் இன்று நடந்த 3 விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்தனர்.
இன்று காலை பத்கல் என்ற இடத்தில் நடந்த முதல் விபத்தில், தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து, ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டனர்.
2வது விபத்தில் 6 பேர் பலி:
சித்ரதுர்கா மாவட்டம் உள்ள மொலக்கல்முர் தாலுகாவில் உள்ள ராயபுராவில் கார் ஒன்று லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வீடு இடிந்து 3 பேர் பலி:
தாவணகரே மாவட்டம் ஹச்சன்கிதுர்கா என்ற இடத்தில் இடைவிடாது பெய்த மழையால் நேற்று மாலை வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த சித்தவ்வா, கீதா ஆகிய இரு சிறுமிகளும், ஹாலம்மா என்ற பெண்ணும் இறந்தனர்.












Click it and Unblock the Notifications