அந்நியச் செலாவணி வழக்கைbr/ரத்து செய்ய சசிகலா கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அமலாக்கப் பிரிவு பத்து ஆண்டுகளுக்கு முன்பு போட்ட அந்நியச் செலாவணி வழக்கை தற்போது விசாரணை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரியும், இந்த வழக்கை காலாவதி ஆனதாக அறிவிக்கக் கோரியும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சென்னை உயர்நீதிமன்Sasikalaறத்தில் மனு செய்துள்ளார்.

கடந்த 1997ம் ஆண்டு சசிகலா மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்கை மத்திய அமலாக்கப் பிரிவு தொடர்ந்தது. இத்தனை காலமாக நடக்காமல் இருந்த இந்த வழக்கின் விசாரணை தற்போது தொடங்கியுள்ளது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சசிகலா சார்பில் மன தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று நீதிபதி தனபாலன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சசிகலா சார்பில் வழக்கறிஞரும், அதிமுக எம்.பியுமான ஜோதி ஆஜரானார்.

அவர் வாதிடுகையில், இந்த வழக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்டது. இத்தனை காலமாக விசாரணை நடைபெறாமல் இருந்தது. ஒரு கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு 10 ஆண்டுகளாக எந்த விசாரணையும் நடைபெறாமல் இருந்தால் அது தானாகவே காலாவதியாகி விடும் என உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது.

எனவே இந்த வழக்கும் காலாவதி ஆனதாக அறிவிக்க வேண்டும். அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபாலன் இதை எதிர்த்து வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தனபாலன், இதுகுறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவிட்டார். வழக்கு வருகிற 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+