மதுரை ரயில் நிலைய அதிகாரிகளை கண்டித்து போராட்டம்
சிவகங்கை:
மதுரை ரயில் நிலைய அதிகாரிகளை கண்டித்து சிவகங்கை வர்த்தக சங்கத்தினர், நுகர்வோர் கழகத்தினர் போராட்ம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
மானாமதுரை-காரைக்குடி அகல ரயில் பாதை பணி நடைபெற்று வருகிறது. இதனால் ராமநாதபுரம் பகுதி மக்கள் சென்னை செல்ல மதுரையிலிருந்து தான் ரயில் ஏற முடியும் சூழல் நிலவுகிறது.
அவசர வேலை காரணமாக சென்னை செல்பவர்கள் எமர்ஜென்சி கோட்டாவில் சீட் பிடிக்க அந்தந்தப் பகுதி எம்பி, எம்எல்ஏ, ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்களிடம் பரிந்துரைக் கடிதம் வாங்கி ரயில்வே அதிகாரிகளிடம் கொடுத்தால் அதற்கு அவர்கள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை.
அப்படி பரிந்துரைக் கடிதம் வாங்கி வருபவர்களை மதிக்காமல் அலட்சியப்படுத்துகின்றனர்.
ரயில்வே எனவே இந்தப் போக்கை கண்டித்து சிவகங்கை வர்த்தக சங்கத்தினர், நுகர்வோர் கழகத்தினர் ேபாராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications