ரம்ஜான் நோன்பு கஞ்சி குடித்த சிறுமி மரணம்

Subscribe to Oneindia Tamil


சென்னை:

வேலூர் மாவட்டம் வாலாஜாபாத்தில், ரம்ஜான் மாத நோன்புக் கஞ்சியைக் குடித்த 13 வயது சிறுமி இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாலாஜாபாத்தில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று மாலை நோன்புக் கஞ்சி விநியோகிக்கப்பட்டது.

தஸ்லிமா என்பவர் தனது 13 வயது மகளுடன் வந்து கஞ்சியைப் பெற்றுச் சென்றார். பின்னர் வீட்டுக்குச் சென்று அவர்கள் கஞ்சியை சாப்பிட்டுள்ளனர்.

கஞ்சியை சாப்பிட்டதும் இருவருக்கும் தலை சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு ஆரம்ப கட்ட சிகிச்சைக்குப் பின்னர் தஸ்லிமாவின் மகள் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

அசுத்தமான தண்ணீரில் கஞ்சி தயாரிக்கப்பட்டதே சிறுமியின் மரணத்திற்குக் காரணம் என போலீஸார் தெரிவித்தனர்.

தஸ்லிமாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+