அத்வானியை சந்திக்க ஜெ. மறுப்பு?
சென்னை:
மூத்த பாஜக தலைவர் எல்.கே. அத்வானியை சந்திப்பதைத் தவிர்க்கவே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோடநாடு எஸ்டேட்டுக்குச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும், அத்வானியை சந்திக்க ஜெயலலிதா அவசரப்படவில்லை என்றும் அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
நெல்லையில் நடைபெறும் பாஜக செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அத்வானி இன்று தமிழகம் வருகிறார். சென்னை வரும் அவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஜெயலலிதா திடீரென சென்னையிலிருந்து கிளம்பி கோடநாடு எஸ்டேட்டுக்குப் போய் விட்டார். இதனால் அத்வானி, ஜெயலலிதா சந்திப்பு கேள்விக்குறியாகி விட்டது.
அத்வானியை சந்திக்க ஜெயலலிதா அவசரப்படவில்லை என்பதால்தான், சந்திப்பைத் தவிர்க்க அவர் கோடநாடு கிளம்பிப் போய் விட்டதாக கூறப்படுகிறது. அத்வானியை சந்திக்கும் திட்டம் எதுவும் ஜெயலலிதாவிடம் இருப்பதாகவும் தெரியவில்லை.
தனது பயணத்தை ரத்து செய்து விட்டு அத்வானியை சந்திக்க 'அம்மா' வரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று அதிமுக தரப்பிலும் கூறப்படுகிறது.
அத்வானி வருகை-நெல்லையில் பலத்த பாதுகாப்பு:
இதன் மூலம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அத்வானி - ஜெயலலிதா சந்திப்புக்கான வாய்ப்புகள் குறைந்து விட்டன.
இந்நிலையில் அத்வானி வருகையொட்டி நெல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவதால் பொதுக் குழு கூட்டம் நடக்கும் மஹராசி மஹால், மாநாடு நடைபெறும் வஉசி மைதானம் மற்றும் சங்கர் நகர் விருந்தினர் மாளிகை ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications