இலங்கை குண்டு வீச்சு - 6 தமிழர்கள் காயம்
Subscribe to Oneindia Tamil
கிளிநொச்சி:
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை விமானப் படை நடத்திய தாக்குதலில் 6 தமிழர்கள் படுகாயமடைந்தனர், பல வீடுகள் இடிந்தன.
முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது. நேற்று காலை 11,.30 மணிக்கு, புதுக்குடியிருப்பு ரயில் நிலையம் அருகே வீடுகள் உள்ள பகுதியில் இரண்டு விமானப் படை விமானங்கள் சரமாரியாக குண்டுகள் வீசித் தாக்கின.
இதில் பல வீடுகள் சேதமடைந்தன. அதில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்தது. அந்த வீட்டிற்குள் இருந்த 6 பேர் படுகாயமடைந்தனர்.
தமிழர் மறு சீரமைப்பு கழகத்தின் பணியாளரான சிவலை ராஜலிங்கம் (42), நாகேந்திரம் கெளரி (22), துரைசிங்கம் (70), விக்டோரியா மணி (65) ஆகியோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற சேத விவரங்கள் குறித்துத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications