அசாமில் கிரிக்கெட் போட்டியால் மோதல், துப்பாக்கி சூடு

Subscribe to Oneindia Tamil


அசாம்:

நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் துப்பாக்கி சூட்டில் முடிந்தது.

அசாம் மாநிலத்தில் தூப்ரி பகுதியில் சபத்புரம் எனும் கிராமம் உள்ளது. இப்பகுதி கிராம மக்கள் நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் பெரும் மோதல் ஏற்பட்டது.

இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் பலமாக மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் சபத்புரம் கிராமத்தில் பெரும் பதட்டம் உருவானதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

போலீஸார் வந்த பிறகும் கலவரக்காரர்கள் கலைந்து போகாமல் நின்று கொண்டிருந்தனர். இதனால் போலீசார் கூட்டத்தை கலைப்பதற்கு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து கலவரக்காரர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 23 பேர் காயமடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+