தஞ்சையில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் சூறை !
Subscribe to Oneindia Tamil
தஞ்தாவூர்:
தஞ்சாவூரில் ஆர்எஸ்எஸ் மாவட்ட அலுவலகத்தை திமுகவினர் தாக்கி சூறையாடினர்.
தஞ்சை டிபிஎஸ் நகரில் உள்ள அலுவலகத்தில் ஆர்எஸ்எஸ் மாநில செய்தி தொடர்பாளர் நாகராஜன், மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் ஆகியோர் இருந்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த திமுக தொண்டர்கள் கடப்பாறை, அரிவாள்களுடன் உள்ளே புகுந்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகள் உடைத்து வெளியில் வீசினர். அலுவலகத்தின் ஜன்னல், கதவுகளையும் உடைத்தெறிந்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் உடைக்கப்பட்டது.
இந்த தாக்குதல் தொடர்பாக மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
ஆனால் இந்த தாக்குதலுக்கும் திமுகவிற்கும் தொடர்பில்லை என மாவட்ட திமுக நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications