விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - 3 பேர் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
கொச்சி:
லட்சத்தீவில் இன்று ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த விமானிகள் உள்ளிட்ட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பவன்ஸ் ஹன்ஸ் நிறுவன ஹெலிகாப்டரை, அரபிக் கடலில், கேரளாவுக்கு அருகே உள்ள லட்சத்தீவு நிர்வாகம் வாடகைக்கு எடுத்திருந்தது. இந்த ஹெலிகாப்டர், இன்று பிற்பகல் 12.15 மணியளவில் தலைநகர் கவரட்டியில் தரையிறங்கியபோது எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்து நொறுங்கியது.
இதில் 2 விமானிகளும், ஒரு தொழில்நுட்ப நிபுணரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்துக்களில் சிக்கியவர்களை மீட்பதற்காக இந்த ஹெலிகாப்டரை லட்சத்தீவு நிர்வாகம் வாடகைக்கு அமர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications