பிரதமர் சுகவீனம் - அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைப்பு
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதால் மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிற்றுவலியால் அவதிப்பட்ட பிரதமருக்கு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அங்கு 3 நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு வீடு திரும்பிய பிரதமருக்கு உடல்நிலை தேறி வந்தது.
இந்நிலையில் திடீரென்று மீண்டும் பிரதமருக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் அவரை முழு ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அலுவல் பணிகளை பிரதமர் மேற்கொள்ள விரும்பினாலும் டாக்டர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.
காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியும் பிரதமரை தொடர்பு கொண்டு முழு ஓய்வு எடுக்குமாறு கூறியுள்ளார்.
இதனால் இன்று நடக்கவிருந்த மத்திய மந்திரிசபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications