திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியிலும் மர்மக் காய்ச்சல் - மாணவ, மாணவியர் பீதி
திருநெல்வேலி:
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியைத் தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும் மர்மக் காய்ச்சல் பரவியுள்ளது. நான்கு நர்சிங் மாணவிகள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு பீதி கிளம்பியுள்ளது.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சமீபத்தில் மர்மக் காய்ச்சலால் மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டனர். கரீமா பிரதான் என்ற உ.பி. மாணவி இந்தக் காய்ச்சலால் உயிரிழந்தார். கல்லூரிக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியிலும் மர்மக் காய்ச்சல் பரவியுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கனக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக தினமும் பாளை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனை வாளகத்தில் உள்ள நர்சிங் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் சிலர் கடந்த ஒருவாரமாக திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாசரேத் அருகே உள்ள பால்குளத்தை சேர்ந்த 2ம் ஆண்டு மாணவி சித்ரா, நெல்லை வாண்ணார்பேட்டையை சேர்ந்த முதலாமாண்டு மாணவி ராணி ஆகியோர் கடந்த 28ம் தேதி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பீதியடைந்த பல மாணவிகள் விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். விடுதி உள்ள பகுதியில் கொசுத் தொல்லை அதிகம் உள்ளதும், சுகாதார சீர்கேடு மலிந்து கிடப்பதுமே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications