நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயார்: மார்க்சிஸ்ட்
திருச்சி:
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க நாங்கள் தயார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரான குருதாஸ் குப்தா கூறியுள்ளார்.
திருச்சியில் ஏஐடியூசி தொழிற்சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்பியும், ஏஐடியூசி பொதுச் செயலாளருமான குருதாஸ் குப்தா கூறியதாவது,
அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் அமல்படுத்துவதற்கு முன் நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டும். விவாத்தின் மூலம் தான் அந்த ஒப்பந்தத்தில் உள்ள சாதக பாதக விஷயங்களை மக்களுக்கு தெரியபடுத்த முடியும்.
இந்த கூட்டத்தில் பாஜக கலந்து கொள்வது பற்றி கவலைப் படக்கூடாது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் என அறிவித்துள்ளார்.
அவர் கூறியது போல நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வந்தால் நாங்களும் சந்திக்க தயார் என்றார் குருதாஸ் குப்தா.
டிசம்பர் 4,5 தேதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய அளவில் சாலை ரயில் மறியல் செய்ய உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications