அரசு பஸ்-லாரி மோதலில் 6 பேர் பலி

Subscribe to Oneindia Tamil


கடலூர்:

கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் அருகே நடந்த கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயமடைந்தனர்.

சேப்பாக்கம் அருகே வேப்பூர் என்ற இடத்தில் அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்து மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. எதிர் திசையில், ஸ்டேஷனரி பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது.

இரு வாகனங்களும் வேப்பூர் வந்தபோது நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 2 பேர் விருத்தாச்சலம் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+