காதலிக்கு கொலை மிரட்டல்-வழக்கறிஞர் கைது
Subscribe to Oneindia Tamil
வாசுதேவநல்லூர்:
கல்யாணம் செய்து கொள்ளக் கூறி காதலியை மிரட்டிய வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.
வாசுதேவநல்லூர் அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திலகராணி. இவரும் அதே ஊரை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயக்கண்ணன் என்பவரும் கடந்த 10 ஆண்டு காலமாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் திலகராணி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயகண்ணனை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் ஜெயக்கண்ணன் கால தாமதம் செய்து வந்தார்.
இந் நிலையில் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தினால் வெட்டி கொலை செய்து விடுவேன் என ஜெயராணியை ஜெயக்கண்ணன் மிரட்டினார்.
இதையடுத்து திலகராணி வாசுதேவநல்லூர் போலீசில் வழக்கறிஞர் ஜெயக்கண்ணன் மீது புகார் செய்தார். புகாரைத் தொடர்ந்து போலீசார் ஜெயக்கண்ணனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications