For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை: சாலை விபத்தில் 3 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News


மதுரை:

மதுரை அருகே இன்று காலை உறவினர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள ஒளவையார் தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் அழகப்பன். இவரது உறவினர் ஒருவர் தஞ்சாவூர் அருகேயுள்ள திருக்காட்டுப்பள்ளியில் இறந்துவிட்டார். உறவினர்களிடம் துக்கம் விசாரிப்பதற்காக டாக்டர் அழகப்பன் உட்பட 12 பேர் வேனில் சென்றனர்.

இன்று காலை 8 மணியளவில் மேலூரை தாண்டி பள்ளப்பட்டியை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, எதிரே அசுர வேகத்தில் வந்த லாரி வேன் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் டாக்டர் அழகப்பனின் தாயார் மோகனா (60), வைராச்சி(60) மற்றும் மீனாட்சி (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டாக்டர் அழகப்பன் உட்பட மற்ற 9 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் அவசர சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த டாக்டர் அழகப்பன், ராமநாதன், சாந்தி, மீனாட்சி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X