செயலாளர்களிடம் சில்மிஷம் - சர்ச்சையில் இந்திய அதிகாரி
துபாய்:
தன்னிடம் பணிபுரியும் பாகிஸ்தான் பெண் உள்ளிட்ட தனது 3 பெண் செயலாளர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இது பொய்யான புகார் என அந்த அதிகாரி மறுத்துள்ளார்.
44 வயதாகும் அந்த இந்தியர், துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். அவரிடம் பணியாற்றும் பாகிஸ்தான் பெண் உள்ளிட்ட 3 பெண் செயலாளர்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இந்திய மேலாளர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வேண்டுமானால் எனக்கு தோழிகளாக இருக்க வேண்டும் என அவர் தங்களை வலியுறுத்தியதாக அந்தப் பெண்கள் கூறியுள்ளனர். பாகிஸ்தான் பெண் தவிர மற்ற இரு பெண்களும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து இந்திய மேலாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இந்த வழக்கு துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தான் அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை, 3 பெண்களும் பொய் சொல்வதாக கூறினார்.












Click it and Unblock the Notifications