சிம் வாங்க விதிமுறைகள் கடுமையாகிறது!
டெல்லி:
தீவிரவாதிகள் கையில் செல்போன்கள் பெருமளவில் புழங்குவதைத் தடுக்கவும், செல்போன் குண்டுகள் என்ற புதிய கலாச்சாரம் பெருகி வருவதைத் தடுத்து நிறுத்தவும், சிம் கார்டுகள் விற்பனைக்கு பெரும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிலீசித்து வருகிறது.
சமீப காலமாக இந்தியாவில் நடைபெறும் தீவிரவாதத் தாக்குதல்களில் செல்போன் குண்டுகள் என்ற புதிய உத்தியை தீவிரவாதிகள் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஹைதராபாத் குண்டுவெடிப்பு, லூதியானா குண்டுவெடிப்பு, ஆஜ்மீர் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களில் செல்போன் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் போலியான பெயர்களில் சிம் கார்டுகளைப் பெற்று அவற்றை செல்போன் குண்டுகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
தீவிரவாதிகள் கையில் சிம் கார்டுகள் சகட்டு மேனிக்குப் புழங்குவதைத் தடுக்கவும், செல்போன் குண்டுகளை முற்றிலும் ஒழிக்கவும் மத்திய அரசு சிம் கார்டு விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் மதுகர் குப்தாவும், தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் மாத்தூரும் விரைவில் சந்தித்து ஆலோசித்து முடிவெடுத்து மத்திய அரசிடம் பரிந்துரைக்கவுள்ளனர்.
தற்ேபாது சிம் கார்டுகளை வாங்க விரும்புேவார் புகைப்பட அடையாளத்தைக் காட்ட வேண்டும், தங்களது இருப்பிட சான்றை அளிக்க வேண்டும் என்று உள்ளது. ஆனால் போலியான முகவரி, போலியான புகைப்படங்களைக் கொடுத்து பலரும் சிம் கார்டுகளை வாங்குவது சகஜமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.