கல்லூரி மாணவியை நிர்வாண படமெடுத்து மிரட்டிய மாணவர் கைது
சென்னை: கல்லூரியில் உடன் படிக்கும் மாணவியை காதலிப்பது போல் நடித்து, அவரை நிர்வாண படமெடுத்து மிரட்டிய மாணவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரப்பாணி. இவருடைய மகன் செய்யது சல்மான் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் மாணவி ப்ரியா என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் அடிக்கடி மகாபலிபுரம், முட்டுக்காடு கடற்கரை ஆகிய பகுதிகளுக்குச் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.
ஓரு முறை லாட்ஜில் ரூம் போட்டு உல்லாசம் அனுபவித்துள்ளனர். அப்போது ப்ரியாவை சல்மான் செல்போன் கேமரா மூலம் நிர்வாணமாக படமெடுத்துள்ளான். அதை உல்லாசத்தின் உச்சியில் இருந்த ப்ரியாவும் கண்டுகொள்ளவில்லை.
இந் நிலையில் கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில், கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சல்மானை ப்ரியா வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் திருமணம் செய்ய மறுத்துள்ளார் சல்மான். இதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்படவே ப்ரியாவுடன் உல்லாசமாக இருந்த படங்களைக் காட்டி மிரட்ட ஆரம்பித்துள்ளான் சல்மான்.
இந்த படங்களை இண்டர்நெட்டில் வெளியிடுவேன் என மிரட்டி பணம் கேட்டுள்ளான். இது குறித்து ப்ரியா பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அதிர்ந்துபோன பெற்றோர் சல்மானுடன் சமாதானம் பேசுவது போல தொலைபேசியில் பேசி அவரை ஒரு இடத்திற்கு வரவழைத்தனர். போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த சல்மானை போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது ப்ரியாவை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சல்மான் கூறியுள்ளார். ஆபாச படங்களை அழித்துவிடுவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் சொன்னபடி நடக்காமல் பணம், நகை கேட்டு மிரட்டியதோடு ப்ரியாவுடன் ஆபாசமாக இருந்த படத்தை எஸ்எம்எஸ் மூலம் ப்ரியாவின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ப்ரியா குடும்பத்தினர் சல்மான் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த சல்மான் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications