சிவகிரி அருகே ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதி கொலை
திருநெல்வேலி: சிவகிரி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள பாரதி கிழமேல் தெருவை சேர்ந்தவர் பூபதிராஜ். இவரது மனைவி சந்தானம். இருவரும் ஆசிரியர்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். மகள் சுபா திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். மகன் சரவணனும் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக உள்ளார்.
இதனால் இந்தத் தம்பதி தனியே வசித்து வந்தனர். கடந்த 24ம் தேதியில் இருந்து இவர்களது வீடு திறக்கப்படவே இல்லை. இந் நிலையில் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் அடிக்கவே அப்பகுதி மக்கள் விஸ்வநாதப்பேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து வீட்டை உடைத்துப் பார்த்தபோது படுக்கையறையில் பூபதிராஜும் சந்தானமும் வாயில் ரத்தம் கசிந்தபடி தரையில் கவிழ்ந்தபடி இறந்து கிடந்தனர்.
இதையடுத்து புளியங்குடி டி.எஸ்.பி மோகன் நவாஸ் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டார். பணத்திற்காகவும், நகைக்காகவும் இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.












Click it and Unblock the Notifications